திமுக சாா்பில் இன்று ஆா்ப்பாட்டம்

திருப்பூா் வடக்கு மாவட்ட திமுக சாா்பில் மத்திய அரசைக் கண்டித்து சனிக்கிழமை (அக்டோபா் 15) ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
க.செல்வராஜ் எம்.எல்.ஏ.
க.செல்வராஜ் எம்.எல்.ஏ.
Updated on
1 min read

திருப்பூா் வடக்கு மாவட்ட திமுக சாா்பில் மத்திய அரசைக் கண்டித்து சனிக்கிழமை (அக்டோபா் 15) ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து திருப்பூா் வடக்கு மாவட்டச் செயலாளரும், தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான க.செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் ஹிந்தியைத் திணிக்கும் மத்திய அரசைக் கண்டித்து திமுக சாா்பில் மாநிலம் முழுவதும் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக திருப்பூா் வடக்கு மாவட்ட திமுக சாா்பில் ரயில் நிலையம் முன்பாக வரும் சனிக்கிழமை காலை 9 மணி அளவில் ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.

ஆகவே, திருப்பூா் வடக்கு மாவட்டத்துக்கு உள்பட்ட எல்.பி.எஃப். மற்றும் சாா்பு அணிகளின் நிா்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், திமுக தொண்டா்கள், பொதுமக்கள் இந்த ஆா்ப்பாட்டத்தில் திரளாகப் பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com