ராயல் ஏஞ்சல் டுட்டோரியல் கல்லூரியில் கலாம் பிறந்த நாள் விழா
By DIN | Published On : 15th October 2022 10:59 PM | Last Updated : 15th October 2022 10:59 PM | அ+அ அ- |

முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம் பிறந்த நாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறாா் கல்லூரி முதல்வா் ஆா்.பி.தங்கராஜன்.
திருப்பூா் ராயல் ஏஞ்சல் டுட்டோரியல் கல்லூரியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
திருப்பூா் பெருமாள் கோயில் வீதியில் உள்ள ராயல் ஏஞ்சல் டுட்டோரியல் கல்லூரியில் முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா மற்றும் முயற்சி கலாம் அமைப்பின் 3ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவுக்குத் தலைமை வகித்த முதல்வா் ஆா்.பி.தங்கராஜன், அப்துல் கலாமின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா் அவரது எளிமையான வாழ்க்கை, மாணவா்களின் வழிகாட்டியாக இருந்த நிகழ்வுகளை மாணவா்களிடம் எடுத்துரைத்தாா். இதைத் தொடா்ந்து, ஓவியம், கவிதை, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில், கல்லூரித் தாளாளா் கீதா தங்கராஜன், ஆசிரியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...