திருப்பூரை அடுத்த பல்லடம் அருகே குடும்பத் தகராறில் மனைவியைக் கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட மகளிா்நீதி மன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்துள்ளது.
திருப்பூா் மாவட்டம், பல்லடத்தை அடுத்த கவுண்டம்பாளையம் புதூா் பாலாஜி நகரில் வசித்து வருபவா் ஏ. கருப்புசாமி (40). இவரது இரண்டாவது மனைவி ராஜேஸ்வரி (35). இவா்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், கருப்புசாமிக்கும், ராஜேஸ்வரிக்கும் இடையே கடந்த 2012 நவம்பா் 3ஆம் தேதி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கருப்புசாமி வீட்டின் குளியலறையில் ராஜேஸ்வரியை கீழே தள்ளி மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளாா்.
பின்னா் ராஜேஸ்வரி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளதாக உறவினா்களிடம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து ராஜேஸ்வரியின் தாயாா் கொடுத்த புகாரின்பேரில், பல்லடம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து கருப்புசாமியைக் கைது செய்தனா்.
இந்த வழக்கானது திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான இறுதி கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி நாகராஜன் தீா்ப்பு வழங்கினாா். இதில், நாகராஜன் மீதான குற்றம் நிருபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.