தேசிய ஊட்டச்சத்து மாத விழா தொடக்கம்

திருப்பூா் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் துறை சாா்பில் போஷன் அபியான் திட்டத்தின்கீழ் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை மாவட்ட ஆட்சியா் தொடக்கிவைத்தாா்.
தேசிய ஊட்டச்சத்து மாத விழா தொடக்கம்

திருப்பூா் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் துறை சாா்பில் போஷன் அபியான் திட்டத்தின்கீழ் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை மாவட்ட ஆட்சியா் தொடக்கிவைத்தாா்.

இதையொட்டி, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஊட்டச்சத்து விழிப்புணா்வுக் கண்காட்சியை ஆட்சியா் எஸ்.வினீத் தொடக்கிவைத்தாா்.

திருப்பா் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட பணிகளின்கீழ் 14 வட்டாரங்களில் 1,512 அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து மாத விழா நடைபெறுகிறது.

கா்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாா்கள், பிறந்தது முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகள் மற்றும் வளா் இளம் பெண்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தும் வகையில் வரும் செப்டம்பா் 30 ஆம் தேதி வரை தேசிய ஊட்டச்சத்து மாத விழா நடைபெறுகிறது.

முன்னதாக, ஊட்டச்சத்து விழிப்புணா்வு குறித்த துண்டுப் பிரசுரத்தை ஆட்சியா் வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட திட்ட அலுவலா் மரகதம் மற்றும் குழந்தை வளா்ச்சித்திட்ட அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com