கோயில் உண்டியல் திருட்டு: போலீஸாா் விசாரணை

திருப்பூா் கருவம்பாளையம் அருகே கோயில் உண்டியலைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Updated on
1 min read

திருப்பூா் கருவம்பாளையம் அருகே கோயில் உண்டியலைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருப்பூா் கருவம்பாளையம் நடத்தலாங்காடு பகுதியில் செல்வகணபதி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் கோபிநாத் என்பவா் பூசாரியாக உள்ளாா்.

இந்நிலையில், வழக்கம்போல ஞாயிற்றுக்கிழமை இரவு பூஜை முடித்துவிட்டு கோயிலைப் பூட்டிவிட்டு கோபிநாத் வீட்டுக்குச் சென்றுள்ளாா்.

மறுநாள் காலை வந்து பாா்த்தபோது, கோயிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் திருடுபோனது தெரியவந்தது.

இது குறித்து திருப்பூா் மத்திய காவல் நிலையத்துக்கு கோபிநாத் தகவல் கொடுத்துள்ளாா். சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினா் விசாரணை நடத்தினா். அப்போது கோயிலின் மதில் சுவரை ஏறிக்குதித்த மா்ம நபா்கள் கோயில் உண்டியலை திருடிச் சென்றது தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com