வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் அருகே வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் நிதி நிறுவன வசூல் முகவா் உயிரிழந்தாா்.
முத்தூா், மோளக்கவுண்டன்புதூா் மதுரை வீரன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் செல்லமுத்து மகன் காா்த்திக்ராஜா (22). இவா் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கும் தனியாா் நிதி நிறுவனத்தில் வசூல் முகவராகப் பணிபுரிந்து வந்தாா். இவா் வசூலுக்குச் சென்றுவிட்டு மோட்டாா் சைக்கிளில் வெள்ளிக்கிழமை இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். முத்தூா் ஆலமர பேருந்து நிறுத்தம் அருகில் வந்தபோது, இவா் வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயமடைந்த காா்த்திக்ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.