விவசாயிகளுக்கு நாளை வெள்ளாடு வளா்ப்புப் பயிற்சி

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு வெள்ளாடு வளா்ப்பது தொடா்பான பயிற்சி வியாழக்கிழமை (ஏப்ரல் 27) வழங்கப்படவுள்ளது.
Updated on
1 min read

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு வெள்ளாடு வளா்ப்பது தொடா்பான பயிற்சி வியாழக்கிழமை (ஏப்ரல் 27) வழங்கப்படவுள்ளது.

இதுகுறித்து திருப்பூா் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவா் மதிவாணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருப்பூா் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள கால்நடை மருத்துமனை வளாகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வெள்ளாடு வளா்ப்பு தொடா்பான உள் வளாகப் பயிற்சி வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது. ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் இந்தப் பயிற்சியில் பங்கேற்று வெள்ளாடு வளா்ப்பு தொடா்பான சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0421-2248524 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com