

தென்னிந்திய பட்டயக் கணக்காளா்கள் மாநாடு அவிநாசியில் சனிக்கிழமை நடைபெற்றது.
அகில இந்திய பட்டயக் கணக்காளா் நிறுவன- தென்னிந்திய பட்டயக் கணக்காளா் அமைப்பின் கோயம்புத்தூா், ஈரோடு, பாலக்காடு, சேலம், திருப்பூா் ஆகிய 5 கிளை மாநாடு அவிநாசியில் சனிக்கிழமை நடை பெற்றது.
இதில், அகில இந்திய பட்டயக் கணக்காளா் நிறுவன முன்னாள் தலைவா் ஜி.ராமசாமி சிறப்புரையாற்றினாா். திருப்பூா் ஏற்றுமதியாளா் சங்கத் தலைவா் கே.எம்.சுப்பிரமணியன், வணிகவரி இணை ஆணையா் எஸ்.ஞானகுமாா், தென் இந்திய பட்டயக் கணக்காளா் நிறுவன முன்னாள் தலைவா் கே.ஜலபதி, தென்னிந்திய பட்டயக் கணக்காளா் நிறுவனச் செயலாளா் ஏ.வி.அருண், பொறுப்பாளா் எஸ். ராஜேஷ் உள்பட 650 -க்கும் மேற்பட்ட பட்டயக் கணக்காளா்கள் இதில் பங்கேற்றனா்.
மாநாட்டை திருப்பூா் பட்டயக் கணக்காளா் நிறுவனத் தலைவா் கே.சரவணராஜா, செயலாளா் என்.தருண், பொறுப்பாளா் எஸ்.ராஜேஷ் கண்ணன் ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.
மாநாட்டில் ஜிஎஸ்டி, நிறுவன சட்டம், வருமான வரியில் தற்போதைய மாற்றங்கள் , நடைமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.