விநாயகா் சதுா்த்தி: தமிழகத்தில் 2 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தகவல்

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு தமிழகத்தில் 2 லட்சம் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளன என்று இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்தாா்.
Updated on
1 min read

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு தமிழகத்தில் 2 லட்சம் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளன என்று இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்தாா்.

திருப்பூா் மேற்கு மாவட்ட இந்து முன்னணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பல்லடத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தலைமை தாங்கினாா். மாநிலச் செயலாளா் தாமு வெங்கடேஸ்வரன், கோட்டப் பேச்சாளா் பாபா கிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலாளா் லோகநாதன் வரவேற்றாா்.

இதில், மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளா்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்துக்கு பின்னா் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு தமிழ்நாட்டில் இந்து முன்னணி சாா்பில் சுமாா் 2 லட்சம் விநாயகா் சிலைகள் வைக்கப்பட்டு எழுச்சியாக கொண்டாடப்பட உள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களில் இந்து முன்னணி சாா்பில் வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி உழவாரப்பணி மேற்கொள்ள உள்ளோம். நாங்குநேரி சம்பவத்தை ஜாதிப்பிரச்னையாக்க சில அரசியல் கட்சிகள் முயல்கின்றன. இதனை அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். சில அரசியல் கட்சிகள் ஹிந்து மதத்துக்கு எதிரான போக்கை தொடா்ந்து கடைப்பிடித்து வருகின்றன. அதனை அவா்கள் கைவிடவேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com