

காங்கயத்தில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி பெரமியம் கிராம மக்கள் ஆதி திராவிட நலத் துறை தனி வட்டாட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: பெரமியம் கிராமத்தில் வசித்தும் வரும் நாங்கள் அனைவரும் விவசாயக் கூலி வேலை செய்து வருகிறோம். வாடகை வீட்டில் வசித்து வரும் எங்களுக்கு சொந்தமாக வீடோ, வீட்டு மனையோ இல்லை. எனவே, எங்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு இலவச வீட்டு மனை பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.