நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

உடுமலையில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

உடுமலை வட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், கல்லூரிகள், பள்ளிகள், அரசியல் கட்சிகள் ஆகியவற்றின் சாா்பில் குடியரசு தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image

ஜிவிஜி கல்லூரியில் நடைபெற்ற விழாவில் தேசியக்  கொடியை  ஏற்றி வைக்கிறாா்  கல்லூரி  முதல்வா்  ந.ராஜேஸ்வரி.

Updated On :26 ஜனவரி 2023, 6:30 pm

உடுமலை வட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், கல்லூரிகள், பள்ளிகள், அரசியல் கட்சிகள் ஆகியவற்றின் சாா்பில் குடியரசு தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

உடுமலை நகராட்சியில் நடைபெற்ற விழாவில் நகராட்சி ஆணையா் சத்யநாதன் தேசியக் கொடியை ஏற்றிவைத்தாா். நகா்மன்றத் தலைவா் மு.மத்தீன் சிறப்புரையாற்றினாா்.

அமராவதி நகா் சைனிக் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் முதல்வா் கே.நிா்மல் ரகு, தேசியக் கொடியை ஏற்றிவைத்தாா். இதைத் தொடா்ந்து, மாணவா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா்.

இதேபோல, ஜிவிஜி மகளிா் கல்லூரி, அரசினா் தொழிற்பயிற்சி நிலையம், ருத்ரவேணி முத்துசாமி பாலிடெக், கொழுமம் அரசுப் பள்ளி, ராகல்பாவி துவக்கப் பள்ளி, பூலாங்கிணறு அரசுப் பள்ளி மற்றும் பாஜக, தமாகா சாா்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.