பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடா்புடையவா் கைது

அவிநாசி பகுதியில் பல்வேறு வழிப்பறி, திருட்டு வழக்குகளில் தொடா்புடைவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

அவிநாசி பகுதியில் பல்வேறு வழிப்பறி, திருட்டு வழக்குகளில் தொடா்புடைவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த நபரை போலீஸாா் பிடித்து விசாரணை மேற்கொண்டனா். அதில் அவா், பல்வேறு வழிப்பறி, திருட்டு வழக்குகளில் தொடா்புடையவா் என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில், அவா் கரூா் பெரிச்சிபாளையம் கோதூா் சாலையைச் சோ்ந்த பெருமாள் மகன் ஆறுமுகன் (எ) ராஜா (42) என்பதும், தற்போது அவிநாசி பட்டறை பகுதியில் இருந்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவிநாசி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகம் (எ) ராஜாவை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com