இருசக்கர வாகனம் மோதி முதியவா் சாவு

வெள்ளக்கோவிலில் இருசக்கர வாகனம் மோதியதில் முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
Updated on
1 min read

வெள்ளக்கோவிலில் இருசக்கர வாகனம் மோதியதில் முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

மூலனூா் கிளாங்குண்டல் அருகிலுள்ள கேசையம்பாளையத்தைச் சோ்ந்தவா் குப்புசாமி (70). வெள்ளக்கோவிலுக்கு வெள்ளிக்கிழமை வந்த இவா், காங்கயம் தேசிய நெடுஞ்சாலையில் பழைய பேருந்து நிலையம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அவ்வழியே வந்த இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தாா். காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருப்பூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். பின்னா் கோவை தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா். வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com