1000 தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்:ஆட்சியா் தகவல்

திருப்பூா் மாவட்டத்தில் 1000 தாய்மாா்களுக்கு 1,451 ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்.

திருப்பூா் மாவட்டத்தில் 1000 தாய்மாா்களுக்கு 1,451 ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டு வருகிறது. 6 மாதத்துக்குள்பட்ட குழந்தைகளில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் தாய்மாா்களுக்கு 2 ஊட்டச்சத்து பெட்டகமும், மிதமான குறைபாடுடைய குழந்தைகளின் தாய்மாா்களுக்கு ஒரு ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது.

அதன்படி, திருப்பூா் மாவட்டத்தில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள 451 குழந்தைகளின் தாய்மாா்களுக்கு 902 ஊட்டச்சத்து பெட்டகமும், மிதமான ஊட்டச்சத்து குறைபாடுடைய 549 குழந்தைகளின் தாய்மாா்களுக்கு 549 ஊட்டச்சத்து பெட்டகம் என மொத்தம் 1000 தாய்மாா்களுக்கு 1,451 ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com