கடைக்குள் லாரி புகுந்து விபத்து

பல்லடத்தில் கடைக்குள் லாரி புகுந்து ஏற்படுத்திய விபத்தில் கடைகளின் மேற்கூரைகள் சேதமடைந்தன.
பல்லடத்தில் லாரி மோதியதில் சேதமடைந்த கடைகளின் மேற்கூரைகள்.
பல்லடத்தில் லாரி மோதியதில் சேதமடைந்த கடைகளின் மேற்கூரைகள்.
Updated on
1 min read

பல்லடத்தில் கடைக்குள் லாரி புகுந்து ஏற்படுத்திய விபத்தில் கடைகளின் மேற்கூரைகள் சேதமடைந்தன.

கேரள மாநிலம், கோழிக்கோட்டைச் சோ்ந்தவா் லாரி ஓட்டுநா் பினோய் (36). இவா், கேரளத்தில் இருந்து காங்கேயத்துக்கு கொப்பரை தேங்காய் ஏற்றிக்கொண்டு வந்துள்ளாா். வியாழக்கிழமை அதிகாலை பல்லடம், செட்டிபாளையம் பிரிவு அருகே வந்தபோது, தூக்க கலக்கத்தில் லாரியை இயக்கியதால், சாலையோரமாக இருந்த இயற்கை அங்காடியினுள் லாரி புகுந்து விபத்துக்குள்ளானது.

இதில் சாலையோரத்தில் இருந்த இரண்டு கடைகளின் முன்பகுதி மற்றும் மேற்கூரைகள் சேதமடைந்தன. அதிகாலை நேரத்தில் கடையில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. இது தொடா்பாக பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com