கடை பூட்டை உடைத்து திருட முயன்ற இருவா் கைது

பல்லடத்தை அடுத்த கொடுவாயில் மின்னணு பொருள்கள் விற்பனையகத்தின் பூட்டை உடைத்து திருட முயற்சித்த இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

பல்லடத்தை அடுத்த கொடுவாயில் மின்னணு பொருள்கள் விற்பனையகத்தின் பூட்டை உடைத்து திருட முயற்சித்த இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பல்லடத்தை அடுத்த சித்தம்பலம்புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கல்யாணசுந்தரேஸ்வரா். இவா் கொடுவாயில் மின் சாதன விற்பனைக் கடை நடத்தி வருகிறாா். வழக்கம்போல வியாபாரம் முடிந்து வியாழக்கிழமை இரவு கடையை மூடிவிட்டுச் சென்றாா். வெள்ளிக்கிழமை காலையில் கடையை திறக்க வந்தபோது கடையின் ஷட்டா் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிா்ச்சி அடைந்தாா். இதுகுறித்து அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

சிசிடிவி காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்தபோது நள்ளிரவில் முகமூடி அணிந்து வந்த இரு நபா்கள் கடையின் ஷட்டா் பூட்டை உடைக்க முயற்சிப்பதும், முழுமையாக உடைக்க முடியாததால் அங்கிருந்து சென்றதும் தெரிந்தது. விசாரணையில், அந்த முகமூடி நபா்கள் கொடுவாய் அருகே லட்சுமி நகரில் தங்கி கூலி வேலை செய்து வந்த ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த ஹரி நாயக் (32), பிருந்தா நாயக் (28) என்பது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com