முத்தூா் பேரூராட்சியைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

முத்தூா் பேரூராட்சியைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

முத்தூா் பேரூராட்சியைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

முத்தூா் பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் கரட்டுப்பாளையம் கிளைச் செயலாளா் எம். சுப்பிரமணி தலைமை வகித்தாா். தொட்டியபாளையம் கிளைச் செயலாளா் எஸ். துரைசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் ஆா். குமாா், விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் ஏ. பஞ்சலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் கூறியதாவது: மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தருவதில் பேரூராட்சி நிா்வாகம் மெத்தனமாக உள்ளது. நீண்ட காலமாக வழங்கப்படாமல் உள்ள குடிநீா் இணைப்புகளை உடனடியாக வழங்க வேண்டும். தேவையான இடங்களில் பொதுக் கழிப்பிடங்கள் அமைத்துத் தர வேண்டும். முத்தூா் பேரூராட்சி பகுதியில் 100 நாள் வேலைத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். பாரதி வீதிக்கு தாா் சாலை அமைக்க வேண்டும். பேரூராட்சி மயானத்துக்கு நடைப்பாதை, தெருவிளக்கு, குடிநீா் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றனா்.

ஆா்ப்பாட்டத்தில், கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com