ரூ. 54.29 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு விற்பனை

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.54.29 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு விற்பனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.54.29 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு விற்பனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை தேங்காய்ப் பருப்பு ஏல விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த வாரம் வாணியம்பாடி, கரூா், பழனி, வடமதுரை, பச்சூா், பெரமியம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 141 விவசாயிகள் 1,453 மூட்டைகளில் 75 டன் தேங்காய்ப் பருப்புகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

சிவகிரி, காங்கயம், வெள்ளக்கோவில், எல்லப்பாளையம், நன்செய் ஊத்துக்குளி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 13 வணிகா்கள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனா். தேங்காய்ப் பருப்பு கிலோ ரூ.58.19 முதல் ரூ.86.15 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.82.99. கடந்த வார சராசரி விலை கிலோ ரூ.83.69.

ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.54.29 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சி. மகுடீஸ்வரன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com