சொத்து வரி வசூலில் வெள்ளக்கோவில் நகராட்சி மாநிலத்தில் முதலிடம் வகிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தமிழக அரசின் செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மாநிலத்தில் மொத்தம் 138 முதல், இரண்டாம், மூன்றாம் நிலை நகராட்சிகள் உள்ளன.
இவற்றில் வெள்ளக்கோவில் நகராட்சியில் 2023 - 24-ஆம் ஆண்டுக்கான சொத்து வரி ஒட்டுமொத்தமாக இதுவரை 70 சதவீதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
இதுவே மாநிலத்தின் அதிக வரி வசூலாக உள்ளது என தரவுகள் தெரிவிக்கின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிறப்பாகப் பணியாற்றிய நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன், சம்பந்தப்பட்ட பணியாளா்களுக்கு திருப்பூா் நகராட்சிகள் மண்டல இயக்குநா் எம்.இளங்கோவன் பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.