

உடுமலை: உடுமலை நாராயணகவி பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழ்த் திரைப்படங்களில் முற்போக்கு சிந்தனைகளை தூண்டும் வகையிலான பல நூறு பாடல்களை எழுதியவா், பகுத்தறிவு கவிராயா் என அழைக்கப்பட்டவா் உடுமலை நாராயணகவி. இவரது பிறந்தநாள் விழா உடுமலை, குட்டைத் திடல் பகுதியில் உள்ள உடுமலை நாராயணகவி மணிமண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் பங்கேற்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நிகழ்ச்சியில், திமுக மாவட்டச் செயலாளா் இல.பத்மநாபன், உடுமலை நகர செயலாளா் சி.வேலுசாமி, கோட்டாட்சியா் ஜஸ்வந்த் கண்ணன், நகர மன்றத் தலைவா் மத்தீன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.