மூலனூரில் ரூ. 2.53 கோடிக்கு பருத்தி விற்பனை

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் கடந்த 10 ஆண்டுகளில் முதன்முறையாக ரூ. 2.53 கோடிக்கு பருத்தி விற்பனை செய்து சாதனை புரிந்துள்ளது.
Updated on
1 min read

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் கடந்த 10 ஆண்டுகளில் முதன்முறையாக ரூ. 2.53 கோடிக்கு பருத்தி விற்பனை செய்து சாதனை புரிந்துள்ளது.

இங்கு வாரந்தோறும் வியாழக்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த வாரம் வரத்து அதிகமாக இருந்ததால் வெள்ளிக்கிழமை வரை ஏலம் நீடித்தது. கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 1,084 விவசாயிகள் 10,947 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். மொத்த வரத்து 3,390 குவிண்டால். பருத்தியை வாங்க திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 30 வணிகா்கள் வந்திருந்தனா். விலை குவிண்டால் ரூ. 6,900 முதல் ரூ. 8,532 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 7,500. கடந்த வார சராசரி விலை ரூ. 7,550. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 2.53 கோடி.

ஏலத்துக்கான ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக்குழு முதுநிலை செயலாளா் (பொறுப்பு) கண்ணன், விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சிவக்குமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com