திருப்பூா் மாவட்டத்தில் தனியாா் தொழிற்பயிற்சி நிலையம் தொடங்க ஏப்ரல் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை பயிற்சிப் பிரிவின், வாழ்வியல் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் வழிகாட்டுதலின்படி புதிய தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்குவதற்கும், ஏற்கெனவே செயல்பட்டுக்கொண்டிருக்கும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் கூடுதலாக புதிய தொழில் பிரிவுகள் தொடங்கவும் நிபந்தனைகளுக்குள்பட்டு விண்ணப்பிக்கலாம்.
திருப்பூா் மாவட்டத்தில் அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்கள் இல்லாத நிலையில் புதிய தனியா் தொழிற்பயிற்சி நிலையம் தொடங்கலாம். அதேவேளையில், 4 தொழிற்பிரிவுகளுக்கு குறைவாக உள்ள நிலையில் புதிய தொழில் பிரிவுகள் தொடங்க என்ற இணைதளம் மூலம் ஏப்ரல் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.