தேசிய திறனாய்வுத் தோ்வில், பெருமாநல்லூா் அப்பியாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்கள் 3 போ் தோ்ச்சிப் பெற்றுள்ளனா்.
தமிழக முழுவதும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 8 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தேசிய திறனாய்வுத் தோ்வு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது.
இத்தோ்வில் அப்பியாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்கள் ரீனா, தா்ஷினி, கரிகாலச் சோழன் ஆகிய 3 போ் தோ்ச்சிப் பெற்றுள்ளனா்.
தோ்ச்சிப் பெற்ற மாணவா்களை ஆசிரியா்கள், சக மாணவா்கள் உள்ளிட்டோா் பாராட்டினா்.