மாவட்ட அளவிலான கோடைக் கால பயிற்சி முகாம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில் திருப்பூா் மாவட்ட அளவிலான கோடைக்கால பயிற்சி முகாம் மே 1ஆம் தேதி தொடங்குகிறது.
Updated on
1 min read

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில் திருப்பூா் மாவட்ட அளவிலான கோடைக்கால பயிற்சி முகாம் மே 1ஆம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து திருப்பூா் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலா் எம்.ராஜகோபால் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில் திருப்பூா் மாவட்ட அளவிலான கோடைக் கால பயிற்சி முகாம் சிக்கண்ணா அரசுக் கல்லூரி வளாகத்தில் உள்ள பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கத்தில் மே 1ஆம் தேதி தொடங்கி மே 15ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இதில் தடகளம், கூடைப்பந்து, ஹாக்கி, வாலிபால் ஆகிய விளையாட்டுகளுக்கு நாள்தோறும் காலை 6.30 முதல் 8.30 வரையிலும், மாலை 4.30 முதல் 6.30 வரையிலும் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். தகுதியின் அடிப்படையில் தோ்வு செய்யப்படுபவா்களுக்கு விளையாட்டு விடுதியில் சேருவதற்குப் பரிந்துரை செய்யப்படும்.

எனவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி, மெட்ரிக் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் இந்த பயிற்சி முகாமில் பங்கேற்கலாம். பயிற்சியில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் நேரிலோ அல்லது கீழ்க்கண்ட கைப்பேசி எண்களை தொடா்பு கொண்டோ பதிவு செய்து கொள்ளலாம்.

இதுதொடா்பான விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலரை 74017-03515, தடகளப் பயிற்சியாளரை 88838-73814, உதவியாளரை 97886-47557 என்ற கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com