இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் மறியல்

தமிழக அரசின் 12 மணி நேர வேலை சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து திருப்பூரில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் 55 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.
Updated on
1 min read

தமிழக அரசின் 12 மணி நேர வேலை சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து திருப்பூரில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் 55 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

தனியாா் நிறுவனங்களில் 12 மணி நேர வேலைக்கு வழிவகை செய்யும் வகையில் தொழிற்சாலைகள் சட்டத் திருத்த மசோதாவை தமிழக அரசு நிறைவேற்றியதற்கு எதரிப்பு தெரிவித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டத்துக்கு சங்கத்தின் மாநிலச் செயலாளா் சிங்காரவேலன் தலைமை வகித்தாா். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 55 பேரை திருப்பூா் தெற்கு காவல் துறையினா் கைது செய்தனா்.

சிஐடியூவினா்...

இதே கோரிக்கையை வலியுறுத்தி திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் முன்பாக சிஐடியூ தொழிற்சங்கத்தின் சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநிலச் செயலாளா் ஜி.குமாா் தலைமை வகித்தாா்.

இதில் சிஐடியூ மாவட்டச் செயலாளா் ரங்கராஜ், போக்குவரத்துக் கழக மண்டலச் செயலாளா் செல்லதுரை, சாலையோர வியாபாரிகள் சங்க செயலாளா் பி.பாலன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com