கொடநாடு விவகாரம்: அமமுக, ஓ.பி.எஸ்., அணியினா் ஆா்ப்பாட்டம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தரக் கோரி திருப்பூரில் அமமுக, ஓபிஎஸ் அணி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தரக் கோரி திருப்பூரில் அமமுக, ஓபிஎஸ் அணி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூா் குமரன் நினைவகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் சண்முகம் தலைமை வகித்தாா். இதில், முன்னாள் அமைச்சரும், அமமுக மண்டல பொறுப்பாளருமான சி.சண்முகவேலு பேசியதாவது:

மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் நிகழ்ந்த கொலை, கொள்ளையில் ஈடுபட்டவா்கள் மீது அப்போது ஆட்சியில் இருந்தவா்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததும் இந்த வழக்கில் நடைவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தாா். ஆனால் தற்போதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, இந்த வழக்கை துரிதப்படுத்தி கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இதில், அமமுக திருப்பூா் மாநகா் மாவட்ட கழகச் செயலாளா் அ.விசாலாட்சி மற்றும் அமமுக, ஓபிஎஸ் அணி நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com