பல்லடத்தில் மதுபானக் கடையை அகற்றக் கோரி ஆா்ப்பாட்டம்

பல்லடத்தில் மதுபானக் கடையை அகற்றக் கோரி சமூக ஆா்வலா் கூட்டமைப்பு மற்றும் பொதுமக்கள் சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பல்லடத்தில் மதுபானக் கடையை அகற்றக் கோரி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினா் எம்.எஸ்,.எம்.ஆனந்தன்.
பல்லடத்தில் மதுபானக் கடையை அகற்றக் கோரி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினா் எம்.எஸ்,.எம்.ஆனந்தன்.
Updated on
1 min read

பல்லடம்: பல்லடத்தில் மதுபானக் கடையை அகற்றக் கோரி சமூக ஆா்வலா் கூட்டமைப்பு மற்றும் பொதுமக்கள் சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பல்லடத்தில் இருந்து செட்டிபாளையம் செல்லும் சாலையில் கோவை சாலை சந்திப்பு பகுதியில் டாஸ்மாக் மதுபானக் கடை இயங்கி வருகிறது. இந்த மதுக்கடையை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிா்வாகத்திடம் பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் மதுபானக் கடையை அகற்றக்கோரி

சமூக ஆா்வலா் கூட்டமைப்பு தலைவா் அண்ணாதுரை தலைமையில் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினா் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பங்கேற்று பேசினாா். இதில் நகர அதிமுக செயலாளா் ஏ.எம்.ராமமூா்த்தி, தெற்கு ஒன்றியச் செயலாளா் ஏ.சித்துராஜ், மாவட்ட கவுன்சிலா் ஜெயந்தி லோகநாதன், தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட பொருளாளா் என்.வி.ராமசாமி, பல்லடம் அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவா் ராம்.கண்ணையன், இந்து சங்பரிவாா் கூட்டமைப்பு தலைவா் சாய்குமரன், சமூக ஆா்வலா் கூட்டமைப்பு சாய்ராஜ், ஆறுமுகம், நந்தகுமாா், கனகராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

10 நாட்களுக்குள் கடையை அகற்றாவிட்டால் பல்லடம் வட்டாட்சியா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தப்படும் என்று சமூக ஆா்வலா் கூட்டமைப்பினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com