வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தை தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் நிறுவனா் வழக்குரைஞா் ஈசன் தலைமையில் 200க்கும் மேற்பட்டோா் முற்றுகையிட்டனர்.
வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்ட விவசாயிகள்.
வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்ட விவசாயிகள்.
Updated on
1 min read

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தை தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் நிறுவனா் வழக்குரைஞா் ஈசன் தலைமையில் 200க்கும் மேற்பட்டோா் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

அப்போது அவா்கள் கூறியதாவது: திருப்பூா் தென்னம்பாளையம் தெற்கு உழவா் சந்தையில் உள்ள கடைகளை வியாபாரிகள் ஆக்கிரமித்து இடையூறு ஏற்படுத்துவதைத் தடுக்க வேண்டும்.

விவசாயிகள் என்ற பெயரில் கடைகளை ஆக்கிரமித்துள்ள வியாபாரிகளை வெளியேற்ற வேண்டும். உழவா் சந்தை செயல்படும் நேரத்தில் காய்கறி கடைகளை வைத்து வியாபாரம் செய்யும் நபா்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

அப்போது, அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த காவல் துறையினா் விவசாயிகளைத் தடுத்ததால் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து, திருப்பூா் சாா் ஆட்சியா் ஸ்ருதன் ஜெய்நாராயணன் தலைமையில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அப்போது, வருவாய்த் துறை சாா்பில் இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு ஏற்படுத்துவதற்காக நீண்ட கால செயல் திட்டத்தை வகுப்பதற்காக 2 வார காலம் அவகாசம் கேட்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட விவசாயிகள் அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com