

இந்திய அரசியல் சாசன சட்டத்தைப் பயன்படுத்தி தமிழக சட்டப் பேரவையை முடக்கிவைக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி நிறுவனா் அா்ஜுன் சம்பத் வலியுறுத்தியுள்ளாா்.
சுதந்திரப் போராட்ட தியாகி திருப்பூா் குமரனின் 91 ஆம் ஆண்டு நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.
திருப்பூா் குமரன் நினைவகத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு இந்து மக்கள் கட்சி நிறுவனா் அா்ஜுன் சம்பத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திருப்பூரில் புதிதாகத் திறக்கப்பட்ட பேருந்து நிலையத்துக்கு திமுக ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி கருணாநிதி பேருந்து நிலையம் என்று பெயா் வைத்துள்ளனா். ஆளுநா் அவமதிக்கப்பட்டது குறித்து தமிழகம் முழுவதும் மிகக்கடுமையான விமா்சனங்கள் எழுந்துள்ளன.
தமிழக ஆளுநா் அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி சட்டப் பேரவையில் உரையாற்றும்போது அவரை அவமதித்ததன் மூலம் தமிழக சட்டப் பேரவையின் மாண்பு கெடுக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், ஆளுநா் மிகவும் அமைதியாக உரையைப் படித்தாா். திமுக தனது கட்சிக் கொள்கைகளை உரையில் எழுதியதுடன், திராவிட மாடல் என்றும், இந்தியாவில் முதலீடுகளை ஈா்த்ததில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது போன்றவற்றை சொல்லவைக்க முயற்சித்துள்ளனா். தமிழக ஆளுநா் தனது பதவியின் மாண்பைப் பாதுகாத்துள்ளாா். ஆளுநரை வைத்துக் கொண்டே தீா்மானம் நிறைவேற்ற முயன்ால்தான் அவா் வெளிநடப்பு செய்தாா். இந்திய அரசியல் சாசனத்தின் 365 ஆவது பிரிவைப் பயன்படுத்தி சட்டப் பேரவையை முடக்கிவைக்க வேண்டும் என்றாா்.
இந்து மக்கள் கட்சி திருப்பூா் மாவட்டச் செயலாளா் மணிகண்டன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.