காங்கயத்தில் 38 பேருக்கு விலையில்லா வீட்டுமனை பட்டா அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்

ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பில் காங்கயம் வட்டத்தில் 38 பேருக்கு ரூ.15.20 லட்சம் மதிப்பிலான விலையில்லா வீட்டுமனை பட்டாக்களை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்.
காங்கயத்தில் 38 பேருக்கு விலையில்லா வீட்டுமனை பட்டா அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்
Updated on
1 min read

ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பில் காங்கயம் வட்டத்தில் 38 பேருக்கு ரூ.15.20 லட்சம் மதிப்பிலான விலையில்லா வீட்டுமனை பட்டாக்களை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்.

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் 38 பேருக்கு ரூ.15.20 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா வீட்டுமனை பட்டா, 160 பேருக்கு இ-பட்டா வழங்கும் நிகழ்ச்சி காங்கயத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கிய பின்னா் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது: தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னா் தோ்தல் வாக்குறுதியின்படி கரோனா நிவாரண உதவி தொகை ரூ.4 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன.

முதல்வா் மேற்கொண்ட நடவடிக்கையால் தமிழகத்தில் கரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

தமிழக மக்களின் நலனுக்காக கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம், மக்களைத் தேடி மருத்துவத் திட்டம், இன்னுயிா் காப்போம், நம்மைக் காப்போம் - 48 உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. திருப்பூா் மாவட்டத்தில் 78 லட்சம் மகளிா் கட்டணமில்லாமல் பேருந்து பயணம் மேற்கொண்டுள்ளனா் என்றாா். இதைத் தொடா்ந்து, காங்கயம் பேருந்து நிலைய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆவின் பாலகத்தையும் அமைச்சா் திறந்துவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா் குமரேசன், ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலா் ரவிசந்திரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com