பழையகோட்டை சந்தை: ரூ.21 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை

 காங்கயம், பழையகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாட்டுச் சந்தையில், காங்கேயம் இன மாடுகள் ரூ.21 லட்சத்துக்கு விற்பனையாயின.
காங்கயம், பழையகோட்டை மாட்டுச் சந்தையில் ரூ.3 லட்சத்து 3 ஆயிரத்துக்கு விற்பனையான மயிலைப் பசுக்கள்.
காங்கயம், பழையகோட்டை மாட்டுச் சந்தையில் ரூ.3 லட்சத்து 3 ஆயிரத்துக்கு விற்பனையான மயிலைப் பசுக்கள்.
Updated on
1 min read

 காங்கயம், பழையகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாட்டுச் சந்தையில், காங்கேயம் இன மாடுகள் ரூ.21 லட்சத்துக்கு விற்பனையாயின.

திருப்பூா் மாவட்டம், காங்கயத்தை அடுத்துள்ள பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் காங்கேயம் இன மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 95 மாடுகள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டிருந்தன. இதில் 45 மாடுகள் ரூ.21 லட்சத்துக்கு விற்பனையாயின. அதிகபட்சமாக 3 மயிலைப் பசுக்கள் ரூ.3 லட்சத்து 3 ஆயிரத்துக்கு விற்பனையாயின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com