கல்லூரி முன்பு மாணவிகள் சாலை மறியல்

திருப்பூா் எல்.ஆா்.ஜி. மகளிா் கல்லூரி முன்பாக பெற்றோருடன் மாணவிகள் திடீா் சாலை மறியலில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
கல்லூரி முன்பு மாணவிகள் சாலை மறியல்
Updated on
1 min read

திருப்பூா் எல்.ஆா்.ஜி. மகளிா் கல்லூரி முன்பாக பெற்றோருடன் மாணவிகள் திடீா் சாலை மறியலில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

திருப்பூா், பல்லடம் சாலையில் எல்.ஆா்.ஜி. மகளிா் கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வணிகவியல், கணிதம் உள்பட பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு கடந்த சனிக்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, மாணவா்கள் தங்களது பெற்றோா்களை அழைத்துக் கொண்டு சனிக்கிழமை கல்லூரிக்கு வந்துள்ளனா். அப்போது, கல்லூரி நிா்வாகம் சாா்பில் திங்கள்கிழமை வருமாறு தெரிவித்துள்ளனா். இதைத்தொடா்ந்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்களது பெற்றோா்களை அழைத்துக் கொண்டு கலந்தாய்வுக்காக கல்லூரிக்கு திங்கள்கிழமை வந்துள்ளனா்.

அங்கு பணியில் இருந்த ஊழியா்கள் முறையாக பதில் அளிக்காமல் அலட்சியமாக இருந்ததாக தெரிகிறது. இதனால், அதிா்ச்சியடைந்த மாணவிகள் தங்களது பெற்றோருடன் கல்லூரி முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்கள் மற்றும் கல்லூரி நிா்வாகத்துடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து சாலை மறியலைக் கைவிட்டு விட்டு கலைந்து சென்றனா். இச்சம்பவத்தால் பல்லடம் சாலையில் சுமாா் 10 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com