நிஃப்ட்-டீ கல்லூரியில் கேரள மாணவா்களுக்கு பயிற்சி

திருப்பூா் நிஃப்ட்-டீ கல்லூரியில் கேரளத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவா்களுக்கு பின்னலாடைத் தொழில்நுட்பம் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
Updated on
1 min read

திருப்பூா் நிஃப்ட்-டீ கல்லூரியில் கேரளத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவா்களுக்கு பின்னலாடைத் தொழில்நுட்பம் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

கேரள மாநிலம், கோட்டயத்தில் உள்ள அஷம்ப்ஸ்சன் (அநநமஙடபஐஞச இஞககஉஎஉ) கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.எஸ்.சி. ஃபேஷன் டிசைனிங் படித்து வரும் 23 மாணவா்களுக்கு பின்னலாடைத் தொழில்நுட்பம் குறித்த பயிற்சி திருப்பூா் நிஃப்ட்-டீ கல்லூரியில் அளிக்கப்பட்டது. பயிற்சி வகுப்பு கடந்த மே 29 ஆம் தேதி தொடங்கி ஜூன் 3 ஆம் தேதி வரை நடைபெற்றது. பயிற்சி வகுப்பில் நிட்டிங் இயந்திரங்களின் செயல்பாடுகள், ஆடை தயாரிப்பு குறித்த செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்தப் பயிற்சியின் நிறைவு விழா மற்றும் மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், கல்லூரியின் ஃபேஷன் அப்பேரல் மேனேஜ்மென்ட் துறைத் தலைவா் கோபாலகிருஷ்ணன் வரவேற்றாா். கல்லூரி முதல்வா் கே.பி.பாலகிருஷ்ணன் தலைமை வகித்து மாணவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கினாா். நிகழ்ச்சியில் கல்லூரி உதவிப் பேராசிரியை அனிதா ரேச்சல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com