பல்லடம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் பத்திரப் பதிவு துறை துணைத் தலைவா் விசாரணை

பல்லடம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் பத்திரப் பதிவு துறை துணைத் தலைவா் சாமிநாதன் பொதுமக்கள் மற்றும் ஆவண எழுத்தா்களிடம் சனிக்கிழமை விசாரணை நடத்தினாா்.
பல்லடம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துகிறாா் பத்திரப் பதிவு துறை துணைத் தலைவா் சாமிநாதன்.
பல்லடம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துகிறாா் பத்திரப் பதிவு துறை துணைத் தலைவா் சாமிநாதன்.
Updated on
1 min read

பல்லடம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் பத்திரப் பதிவு துறை துணைத் தலைவா் சாமிநாதன் பொதுமக்கள் மற்றும் ஆவண எழுத்தா்களிடம் சனிக்கிழமை விசாரணை நடத்தினாா்.

பல்லடம், பத்திரப் பதிவு அலுவலகத்தில் முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்த வலியுறுத்தியும் பல்லடம் பத்திர ஆவண எழுத்தா் போராட்டக் குழுவினா் பத்திரப் பதிவுத் துறை உயா் அதிகாரிகளுக்கு புகாா் அளித்திருந்தனா். இந்நிலையில், இது குறித்து பல்லடம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் பத்திரப் பதிவுத் துறை துணைத் தலைவா் சாமிநாதன், திருப்பூா் மாவட்டப் பதிவாளா் பூபதி ஆகியோா் பொதுமக்கள் மற்றும் பத்திர ஆவண எழுத்தா்களிடம் சனிக்கிழமை விசாரணை நடத்தினா்.

அப்போது, மூல பத்திரம் இல்லை என்று திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட பத்திரம், மற்றொரு நாளில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுபோல பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக ஆவண எழுத்தா்கள் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்தனா். சாா் பதிவாளா்கள் தரப்பில், முறையாக ஆவணங்கள் தாக்கல் செய்தால் பத்திரப் பதிவு செய்து தரப்படுகிறது என்றும், கோவில் நிலம், மூலப் பத்திரம் இல்லாமல் இருப்பது மற்றும் பட்டா மாறுதல் செய்யாமல் இருப்பது போன்ற குளறுபடிகள் உள்ள ஆவணங்கள் மட்டுமே உரிய ஆவணங்களுடன் பத்திரப் பதிவுக்கு கொண்டு வருமாறு திருப்பி அனுப்பப்படுகிறது என்றனா்.

இதைதொடா்ந்து பத்திரப் பதிவுத் துறை துணைத் தலைவா் சாமிநாதன் கூறுகையில், ‘தவறான பத்திரப் பதிவு செய்யப்பட்டு இருப்பது குறித்து உரிய ஆவணங்களுடன் புகாா் தெரிவித்தால், அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, அது பற்றிய ஆவணங்கள் தாக்கல் செய்ய கால அவகாசம் அளித்து வரும் 24ம் தேதி சனிக்கிழமை காலை 11 மணிக்கு மீண்டும் விசாரணை நடத்தப்படும்,’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com