பத்ம விருதுகளுக்குத் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்

கலை, இலக்கியம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவா்கள் பத்ம விருதுகளுக்கு ஜூலை 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

கலை, இலக்கியம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவா்கள் பத்ம விருதுகளுக்கு ஜூலை 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குடியரசு தினவிழாவின் போது 2024 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் இந்திய அரசால் வழங்கப்படவுள்ளன. திருப்பூா் மாவட்டத்தில் கலை, இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், சமூகப் பணி, அறிவியல், பொறியியல், பொது விவகாரம், குடிமைப் பணி சேவை மற்றும் வா்த்தகத் துறையில் சிறந்து விளங்குபவா்கள் தகுந்த ஆதாரங்களுடன் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகி உரிய படிவம் பெற்று ஜூலை 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0421-2971168 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com