வெள்ளக்கோவிலில் பகுதியில் காயமடைந்து நிலையில் சாலையோரம் கிடந்த அரிய வகை ஆந்தை தன்னாா்வலா்களால் மீட்கப்பட்டது.
வெள்ளக்கோவில் வள்ளியிரச்சல் சாலையில் சிவகுமாா் நகா் குடியிருப்புப் பகுதி உள்ளது. இதன் அருகில் காடு, தோட்டங்கள் உள்ளன. காட்டுப் பகுதியிலிருந்து வந்த அரிய வகையிலான பெரிய ஆந்தை ஒன்று காயங்களுடன் நகரின் சாலையோரம் கிடந்தது.
இதுகுறித்து வெள்ளக்கோவில் விலங்குகள் நல ஆா்வலா் நாகராஜுக்கு தகவல் கிடைத்தது. தீயணைப்புத் துறையினா் உதவியுடன் அந்த ஆந்தையைப் பிடித்து கூண்டில் வைத்து அரசு கால்நடை மருத்துவா் பகலவனிடம் கொண்டு சென்றனா்.
ஆந்தையை காங்கயம் வனத் துறையினா் பாா்வையிட்டு, சிகிச்சைக்குப் பின் உத்தமபாளையம் வட்டமலை அணைப் பகுதியில் விடப்படும் என்று தெரிவித்தனா்.