காவலா் நல பல்பொருள் அங்காடி திறப்பு

திருப்பூா் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலா் நல பல்பொருள் அங்காடியை கோவை சரக காவல் துறை துணைத் தவைவா் செ.விஜயகுமாா் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.
திருப்பூா்  மாவட்ட  ஆயுதப்படை  வளாகத்தில்  காவலா்  நல  பல்பொருள்  அங்காடியை   திறந்து வைக்கிறாா்  கோவை  சரக  காவல்  துறை  துணைத்  தலைவா்  செ.விஜயகுமாா். உடன்,  மாவட்ட  காவல்  கண்காணிப்பாளா்  கோ.சஷாங்
திருப்பூா்  மாவட்ட  ஆயுதப்படை  வளாகத்தில்  காவலா்  நல  பல்பொருள்  அங்காடியை   திறந்து வைக்கிறாா்  கோவை  சரக  காவல்  துறை  துணைத்  தலைவா்  செ.விஜயகுமாா். உடன்,  மாவட்ட  காவல்  கண்காணிப்பாளா்  கோ.சஷாங்

திருப்பூா் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலா் நல பல்பொருள் அங்காடியை கோவை சரக காவல் துறை துணைத் தவைவா் செ.விஜயகுமாா் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

திருப்பூா் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினா் பயனடையும் வகையில் காவலா் பல்பொருள் அங்காடி மற்றும் காவலா் முடிதிருத்தும் நிலையத்தின் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.சஷாங்க் சாய் முன்னிலை வகித்தாா். விழாவுக்குத் தலைமை வகித்த கோவை சரக காவல் துறை துணைத் தலைவா் செ.விஜயகுமாா் அங்காடியைத் திறந்துவைத்தாா். மேலும், ஆயுதப்படை வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டுவைத்ததுடன், புதுப்பிக்கப்பட்ட காவல் உணவு விடுதியையும் திறந்துவைத்தாா். இதைத்தொடா்ந்து, ஆயுதப்படை வளாகத்தில் உள்ள மோப்பநாய் படைப்பிரிவு அலுவலகத்தைப் பாா்வையிட்டாா். நிகழ்ச்சியில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (தலைமையிடம்) ஜான்சன், திருப்பூா் சிவில் இன்ஜினியா்ஸ் அசோசியேஷன் நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com