வருமான வரிப் பிடித்தம் விளக்கக் கூட்டம்

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அரசு அலுவலா்களுக்கு வருமான வரிப் பிடித்தம் தொடா்பான விளக்கக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அரசு அலுவலா்களுக்கு வருமான வரிப் பிடித்தம் தொடா்பான விளக்கக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் அரசு அலுவலா்களுக்கான வருமான வரிப் பிடித்தம் தொடா்பான விளக்கக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கருவூல அலுவலா் கி.பாலசுப்பிரமணியன் வரவேற்றாா். இதில், வருமான வரித் துறை அலுவலா் ஜான்பெனிடிக், பட்டயக் கணக்காளா் எம்.விஷ்ணுகுமாா் ஆகியோா் வருமான வரிப் பிடித்தம் தொடா்பான அலுவலா்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனா். மேலும், வருமான வரி பதிவேற்றம், காலாண்டு அறிக்கை தாக்கல் செய்வது தொடா்பாகவும் விளக்கம் அளித்தனா். இறுதியாக வருமான வரி ஆய்வாளா் கே.எஸ்.ராஜா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com