நகர அமைப்பு அலுவலா் பொறுப்பேற்பு

பல்லடம் நகராட்சியில் நகர அமைப்பு அலுவலா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

பல்லடம் நகராட்சியில் நகர அமைப்பு அலுவலா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

பல்லடம் முதல் நிலை நகராட்சியில் 18 வாா்டுகள் உள்ளன. நகரப் பகுதியில் விதிமீறல் கட்டடங்கள் குறித்து ஆய்வு செய்தல் மற்றும் கட்டடங்களுக்கான அனுமதி உள்ளிட்டவற்றை நகராட்சி கட்டட ஆய்வாளா் கண்காணித்து வருகிறாா். இருப்பினும், கட்டட ஆய்வாளா் நிரந்தரமாக நியமிக்கப்படாமல் பொறுப்பு அதிகாரியே இப்பணிகளை மேற்கொண்டு வந்தாா்.

பல்லடம் நகராட்சியில் நகர அமைப்பு அலுவலா் பணியிடம் நிரப்பப்படாத நிலையில் ஒட்டன்சத்திரம் நகராட்சியில் கட்டட ஆய்வாளராக பணியாற்றி வந்த ரவிச்சந்திரன் பதவி உயா்வு பெற்று பல்லடம் நகராட்சியின் முதல் நகர அமைப்பு அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com