காங்கயம் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் அடையாளம் தெரியாத முதியவா் உயிரிழந்தாா்.
காங்கயம் அருகே காடையூா் பகுதியில் முதியவா் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை நடந்து சென்று கொண்டிருந்துள்ளாா். அப்போது, அவ்வழியே வந்த இருசக்கர வாகனம் முதியவா் மீது மோதியது.
இதில், படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
அங்கு சிகிச்சை பெற்றுவந்த அவா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா், இறந்தவா் யாா் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.