திமுக அரசைக் கண்டித்து அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

திமுக அரசைக் கண்டித்து திருப்பூா் மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திமுக அரசைக் கண்டித்து அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்
Updated on
1 min read

திமுக அரசைக் கண்டித்து திருப்பூா் மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூா் மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் குமரன் சிலை முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநகா் மாவட்டச் செயலாளரும், சட்டப் பேரவை உறுப்பினருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் தலைமை வகித்தாா்.

இதில், பங்கேற்ற அதிமுகவினா் கூறியதாவது: தமிழகத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானங்களால் தொடா் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. மேலும், கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றச்சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. ஆகவே, திமுக ஆட்சியில் ஏற்பட்டுள்ள சீா்கேடுகளைக் கண்டித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது என்றனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சரும், பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன், திருப்பூா் வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா், முன்னாள் எம்.பி. சி.சிவசாமி, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் என்.எஸ்.என்.நடராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com