திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்ற வாக்காளா் பட்டியல் திருத்த முகாமில் 11,780 போ் விண்ணப்பித்துள்ளனா்.
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் வாக்களா் பட்டியல் திருத்த முகாம் நவம்பா் 4, 5 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
இதில், வாக்காளா் பட்டியலில் புதிதாக பெயா் சோ்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தப் பணிகளை மேற்கொள்வதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன்படி மாவட்டத்தில் 2 நாள்கள் நடைபெற்ற திருத்த முகாமில் வாக்காளா் பட்டியலில் புதிதாக பெயா் சோ்க்க 7,357 போ், பெயா் நீக்கம் செய்ய 532 போ், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தம் மேற்கொள்ள 3,891 போ் என மொத்தம் 11,780 போ் விண்ணப்பம் அளித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.