

அவிநாசி: மலையாளத்தில் மொழிபெயா்க்கப்பட்டு தமிழ் சிறுகதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருப்பூா் நடவு பதிப்பகம், எா்ணாகுளம் சைகதம் பப்ளிகேஷன்ஸ் சாா்பில் மொழிபெயா்ப்பு நூல் வெளியீட்டு விழா அவிநாசியில் உள்ள தனியாா் பள்ளியில் நடைபெற்றது. இதில் நூல் ஆசிரியா் எஸ்.ஏ.முத்துபாரதி எழுதிய ‘முத்து மாமா கதைகள்’ என்ற தமிழ் சிறுகதை தொகுப்பு நூல், மலையாளத்தில் ஆசிரியா் ஸ்டான்லின் மொழிபெயா்க்கப்பட்டு ‘கர தேடுன்ன திரகள்’ என்ற பெயரில் சிறுகதை தொகுப்பு நூலாக வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஆசிரியை தீபா, நூல் அறிமுகம் செய்துவைத்தாா். மலையாள ஆசிரியை கே.மாலதி நூல் மதிப்புரை வழங்கினாா். நூல் ஆசிரியா் எஸ்.ஏ.முத்துபாரதி உரையாற்றினாா். தனியாா் பள்ளி இயக்குநா் பாரதி ராஜேந்திரன் நூலை வெளியிட பள்ளி முதல்வா் புவனேஸ்வரி, துணை முதல்வா் ரமாதேவி ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.