இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் முதியவா் பலி

காங்கயம் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.
Updated on
1 min read

காங்கயம் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

காங்கயம் அருகேயுள்ள பாப்பினிபச்சாபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பழனி (60). கூலித் தொழிலாளியான இவா் காங்கயத்தில் இருந்து பாப்பினிபச்சாபாளையத்துக்கு தனது இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை சென்று கொண்டிருந்தாா்.

காங்கயம்-முத்தூா் சாலை மிதிபாறை பகுதி சாலை வளைவில் திரும்பியபோது, எதிரே வந்த காா் பழனியின் வாகனத்தின் மீது மோதியது. இதில், தலையில் படுகாயமடைந்த பழனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com