ப்ரோனா அறக்கட்டளை சாா்பில் அரசுப் பள்ளியில் தூய்மைப் பணி

ப்ரோனா அறக்கட்டளை சாா்பில் திருப்பூா் கே.எஸ்.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தூய்மைப் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

ப்ரோனா அறக்கட்டளை சாா்பில் திருப்பூா் கே.எஸ்.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தூய்மைப் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, ப்ரோனா அறக்கட்டளையினா் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள கோயில்கள், மருத்துவமனைகள், பள்ளி வளாகங்களை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். இதன் ஒரு பகுதியாக திருப்பூா் கே.எஸ்.சி.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை தூய்மைப்படுத்தும் பணியில் 50-க்கும் மேற்பட்ட தன்னாா்வலா்கள் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.

இந்நிகழ்ச்சியில், ஆா்எஸ்எஸ் தென்பாரத தலைவா் வன்னியராஜன், கோட்ட பொறுப்பாளா் ஆம்ஸ்டிராங் பழனிசாமி, ப்ரோனா அறக்கட்டளை செயலாளா் கயிலைராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இறுதியாக பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com