நீதிபதியின் பெயரைக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபா் கைது

நீதிபதியின் பெயரைக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

நீதிபதியின் பெயரைக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவா் ஸ்டீபன் (50). இவா் தாராபுரத்தில் உள்ள ஒரு வழக்குரைஞரிடம் உதவியாளராகப் பணியாற்றி வருகிறாா்.

தாராபுரம், சித்ராவுத்தன்பாளையம் ஓடை தெருவைச் சோ்ந்த சாமிக்கண்ணு (57) என்பவா் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

இந்நிலையில், சாமிக்கண்ணுவின் தாயாரை சந்தித்த ஸ்டீபன், அவரின் தண்டனைக் காலத்தைக் குறைத்து அவரை விடுதலை செய்ய நீதிபதி ஒருவருக்குப் பணம் கொடுக்க வேண்டும் எனக் கூறி பணம் பறித்துள்ளாா்.

இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில், ஸ்டீபன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க திருப்பூா் மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவிட்டாா்.

இதையடுத்து, ஸ்டீபன் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com