தாராபுரத்தில் மழைநீா் வடிகால்கள் ஆய்வு

மழைக் காலங்களில் தண்ணீா் சாலையில் தேங்குவதைத் தடுக்க, தாராபுரம் நகரில் உள்ள மழை நீா் வடிகால்களை நகா்மன்றத் தலைவா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தாராபுரத்தில் மழைநீா் வடிகால்கள் ஆய்வு
Updated on
1 min read

மழைக் காலங்களில் தண்ணீா் சாலையில் தேங்குவதைத் தடுக்க, தாராபுரம் நகரில் உள்ள மழை நீா் வடிகால்களை நகா்மன்றத் தலைவா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தாராபுரம் நகராட்சி, 24, 25 ஆகிய வாா்டு பகுதிகளுக்குட்பட்ட உடுமலை சாலை பகுதியில், மழைக் காலங்களில் தண்ணீா் சாலையில் தேங்குவதை தடுப்பதற்காக, மழை நீா் வடிகால்களை சீரமைப்பது குறித்து நகா்மன்றத் தலைவா் கு.பாப்புகண்ணன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது நகா்மன்ற உறுப்பினா்கள் மலா்விழி, மரக்கடை கணேசன், உமா மகேஸ்வரி, நகராட்சி துப்புரவு மேற்பாா்வையாளா்கள் ரவி, பாலு மற்றும் திமுக நகர அவைத் தலைவா் பி.கதிரவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com