திருப்பூா்: மாணவா்களின் கற்றல் செயல்பாட்டைப் புறக்கணிக்கும் தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும் என்று பொதுக் கல்விக்கான மாநில மேடை பொதுச் செயலாளா் பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்தாா்.
திருப்பூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் ‘நமக்கான இந்தியாவை நோக்கி’ என்ற தலைப்பில் 10 நாள் காலை நேரத் தொடா் வகுப்பு கடந்த வியாழக்கிழமை தொடங்கியது.
இதன் 4-ஆவது நாள் அமா்வு திங்கள்கிழமை நடைபெற்றது. மாா்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஆா்.குமாா் தலைமை வகித்தாா்.
இதில், ‘தேசிய கல்விக் கொள்கை: காா்ப்பரேட்மயமும், காவிமயமும்’ என்ற பொருளில் பிரின்ஸ் கஜேந்திரபாபு பேசியதாவது:
கல்வி என்பது பள்ளிகளில் தொடங்குவதில்லை. குழந்தைகள் வீட்டில் வளரும்போதே ஏன், எதற்கு என்று கேள்வி கேட்கத் தொடங்குவதில் இருந்தே தொடங்குகிறது. கற்றல் செயல்பாட்டின் மூலம்தான் மனிதா்கள் உருவானாா்கள். சிந்தனை வளா்ச்சி, அறிவு வளா்ச்சி ஏற்பட்டது.
மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் தேசிய கல்விக் கொள்கை அத்தகைய கற்றல் செயல்பாட்டுக்கு உகந்ததாக இல்லை.
எனவே, தேசிய கல்விக் கொள்கையை முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும் என்றாா்.
இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.