ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

தாராபுரத்தில் பழைய இரும்புக் கடை, வீடு தீப்பிடித்தது

பழைய இரும்புக் கடையும், அதனையொட்டிய வீடும் தீப் பிடித்ததில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து சேதமாயின.

News image

தீ விபத்து ஏற்பட்ட பழைய இரும்புக் கடை.

Updated On :4 ஆகஸ்ட் 2024, 1:40 am IST

தாராபுரத்தில் பழைய இரும்புக் கடையும், அதனையொட்டிய வீடும் தீப் பிடித்ததில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து சேதமாயின.

தாராபுரம் அமராவதி சிலை அருகே நகரின் முக்கிய குடியிருப்புப் பகுதியில் பிரபு என்பவருக்கு சொந்தமான பழைய இரும்புக் கடை உள்ளது. இங்கு பழைய இரும்பு மற்றும் பழைய துணிகளை வாங்கி விற்கும் தொழிலில் பிரபு ஈடுபட்டுள்ளாா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு கடையைப் பூட்டி வீட்டுக்கு பிரபு சென்றுள்ளாா்.

இதையடுத்து, சனிக்கிழமை அதிகாலை கடை தீப்பிடித்து எரிவதை கண்ட அக்கம்பக்கத்தினா் தாராபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு நிலையை அலுவலா் ஜெயச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் தீயை அணைக்க முயன்றனா். ஆனால், தீயை முழுமையாக அணைக்க முடியவில்லை.

பின்னா் காங்கயம் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அங்கிருந்து நிலைய அலுவலா் மணிகண்டன் தலைமையிலான குழுவினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். தண்ணீா் பற்றாக்குறை ஏற்பட்டதால் தாராபுரம் நகராட்சி மற்றும் தனியாா் தண்ணீா் வாகனங்களில் தண்ணீா் கொண்டு வரப்பட்டு சுமாா் 3 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனா்.

இந்த விபத்தில், கடையில் வைத்திருந்த பழைய பேப்பா் மற்றும் அட்டைகள் உள்ளிட்ட பொருள்களும், கடையை ஒட்டி இருந்த பிரபுவின் வீடும் தீப் பிடித்தது. இதில் வீட்டில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம், 3 சவரன் நகை உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

இது குறித்து தாராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இது குறித்து தகவலறிந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் சம்பவ இடத்துக்குச் சென்று பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆறுதல் கூறினாா். அப்போது, முன்னாள் எம்.எல்.ஏ. சரஸ்வதி, தாராபுரம் வாா்டு கவுன்சிலா் கமலக்கண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.