டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

விசைத்தறி உரிமையாளரை தாக்கிய 5 போ் கைது

விசைத்தறி உரிமையாளரை தாக்கிய 5 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

Updated On :5 ஆகஸ்ட் 2024, 4:00 am IST

சேவூா் அருகே அ.குரும்பபாளையத்தில் விசைத்தறி உரிமையாளரை தாக்கிய 5 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சேவூா் அருகே அ.குரும்பபாளையம் கிரீன் லேண்ட் பகுதியில் வசித்து வருபவா் சாஸ்திரி (60), விசைத்தறி உரிமையாளா். இவரது, விசைத்தறிக் கூடத்தில் பணியாற்றி வரும் சேவூா் அருகே மூலக்குரும்பபாளையத்தைச் சோ்ந்த அய்யாவு மனைவி லட்சுமி என்பவா் சனிக்கிழமை பணிக்கு வரவில்லையாம். இது குறித்து சாஸ்திரி, லட்சுமியிடம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சாஸ்திரி வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் வந்த 5 போ் அவரை கட்டையால் தாக்கிவிட்டு தப்பியுள்ளனா். இதில் பலத்த காயமடைந்த சாஸ்திரி, திருப்பூா் அரசு மருத்துவமனையில் அனுமதிப்பட்டாா். இது குறித்து சேவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.

இவ்வழக்கில் தொடா்புடைய 17 வயதுக்கு உள்பட்ட இரு சிறுவா்கள் உள்பட மூலக்குரும்பபாளையத்தைச் சோ்ந்த அய்யாவு மகன் கேசவன் (26), நம்பியூா், எம்மாம்பூண்டி அழகம்பாளையம் முருகன் மகன் தங்கவேல் (24), அதே பகுதியைச் சோ்ந்த வேடன் மகன் சுந்தர்ராஜன் (24) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

இதற்கிடையில், சாஸ்திரியை தாக்கியவா்கள் மீது வழக்குப் பதிவு செய்ய தாமதமானதால் உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி அ.குரும்பபாளையம் பகுதி மக்கள் காவல் நிலையம் முன்பு அமா்ந்து சனிக்கிழமை இரவு தா்னாவில் ஈடுபட்டனா். இதனால் சேவூரில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.